ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பயணித்துள்ளார். அவர் அங்கு ஐந்து நாட்கள் தங்கியிருப்பாரென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர்களின் மாநாடு சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் 10 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் நாட்டிலிருந்து பயணித்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.