முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு பெப்ரவரி 7 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உச்சநீதிமன்றத்தினால் இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதியரசர்களான விஜித் மளல்கொட, எஸ்.துரைராஜா, மூது பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள் பிரதம நீதியரசர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். தமது கட்சிக்காரருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதும் இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதாக சரத் என் சில்வாவின் சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2018 ம் ஆண்டு டிசம்பர் 3 ம் திகதி தேசிய எக்கமுத்துவ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நீதிமன்றத்தை நிந்திக்கும் வகையில் உரையாற்றியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர உள்ளிட்ட மூவரினால இம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதிவாதி மீண்டும் அவ்வாறு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்க்கும் வகையில் இடைக்கால தடையொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் தனது மனுவில் தெரிவித்தனர்.