ஹட்டன் ருவான்புர நீரூற்று பகுதியிலுள்ள வனத்தில் தீப்பரவியுள்ளது. இதனால் பாரிய வனப்பகுதி தீயில் கருகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவுப்பகுதிகளில் தற்போது வரட்சியான காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் விலங்குகளை வேட்டையாடுவதற்கென சிலர் வனப்பகுதிகளுக்கு தீயிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவங்கள் தொடர்பில் வன பாதுகாப்பு அதிகாரிகளும், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.