போதை மாத்திரைகளுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட படைப்பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலவத்த பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஆயிரத்து 695 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. 34 வயதான குறித்த நபர் பத்தரமுல்லை பகுதியை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. சந்தேகநபரை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றி;ல் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது