விவசாய மற்றும் கமநல சேவை திணைக்களத்தின் அனைத்து விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களினதும் விடுமுறைகள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.டபிள்யு.வீரகோன் தெரிவித்துள்ளார். அவர்கள் இன்று முதல் செய்கை நிலங்களை சோதனை செய்யும் பணியில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.