எதிர்வரும் நாட்களில் மாதிரி கிராமங்கள் பல மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படுமென வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாளைய தினம் 153வது மாதிரி கிராமம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. மாத்தளை லக்கல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்தில் 20 வீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார். நீர், மின்சாரம், உள்வீதி உள்ளிட்ட சகல அடிப்படை வசதிகளும் குறித்த கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிணைவாக 105 பேருக்கு வீட்டுக்கடனும் வழங்கப்படுமென வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.