பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள படைப்புழுவை ஒழிக்கும் செயற்பாடுகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகள் எதிர்வரும் 31ம் திகதி வரை தொடர்ச்சியாக அமுல்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
படைப்புழுவை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கு விவசாயிகளினதும் பங்களிப்பை பெற்று கொண்டு முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட மத்திய மாகாணம் உள்ளிட்ட படைப்புழு அச்சுறுத்தல் காணப்படுகின்ற சகல பகுதிகளையும் உள்ளடக்கியவாறு ஒழிப்பு பணிகளை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் கலென்பிந்துலுவௌ, துருவில, ஹொரவபொத்தான போன்ற பகுதிகளில் சோளச்செய்கைக்கு படைப்புழுவினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பயிர்நிலங்கள் இதுவரை அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சேதமடைந்த பயிர் நிலங்களுக்கு என நிவாரணம் ஒன்றை பெற்று தருமாறு விவசாயிகள் அரசாங்கத்தை கோரியுள்ளர்.