யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் மூவர் மீது மோதி தப்பிச்சென்ற ட்ரக் வண்டியை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்போது பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி ட்ரக் வண்டியொன்று தப்பிசசென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.