புகைப்படம் எடுப்பதற்கு பொருத்தமான கவர்ச்சிகர நகரம், கொழும்பு நகரம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உலகளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹுவாவே நிறுவனம் உள்ளிட்ட பல குழுவினர், சமூக ஊடகங்களை பயன்படுத்தி குறித்த ஆய்வை முன்னெடுத்துள்ளனர். இதற்கென சமூக ஊடகங்களினூடாக சுமார் 13 இலட்சம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக ஹுவாவே நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜஸ்டின் கொஸ்டோலோ தெரிவித்துள்ளார். காலி முகத்திடலை அண்மித்த பகுதி, பேரேவாவி மற்றும் முருகன் கோவில் உள்ளிட்ட பிரதேசங்கள் சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் ஈர்த்துள்ளன. இதற்கமைய அதிகளவானோர் கொழும்புக்கு வருகைத்தருவதற்கும், அங்கு புகைப்படங்களை எடுத்துக்கொள்வதற்கும் ஆர்வம் காட்டி வருவதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானின் யொகோஹமா மற்றும் உகண்டாவின் கோரில்லா தேசிய பூங்கா ஆகியனவும் புகைப்படம் எடுப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வரும் இடமாக காணப்படுவதாக ஆய்வுகளை மேற்கொண்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.