கடல் நீரின் வெப்பநிலை வேகமாக அதிகரிப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சீன தேசிய ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட பல குழுக்கள் இணைந்து ஆய்வை முன்னெடுத்துள்ளது. புவி வெப்பமடைவதன் காரணமாக கடல் நீரின் உஷ்ணம் அதிகரிக்கிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடற்தாவரங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சீன தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. படிம எரிபொருட்களின் தீப்பொறிகளினால் பச்சை வீட்டுக்கும், ஓசோன் படலத்துக்குமிடையில் காணப்படும் அதிகப்படியாக வெப்பமானது நூற்றுக்கு 93 வீதம் கடல் நீரினூடாக உறிஞ்சப்படுகிறது. கடல் நீரின் உஷ்ணமானது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் சமுர்த்திர வாழ் உயிரினங்கள் மற்றும் கடற்தாவரங்கள் பூமியிலிருந்து முற்றாக அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சீன தேசிய ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.