முதலாம் உலக யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிகப்பலொன்றின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் வடக்கு பகுதியிலுள்ள கடற்பகுதியில் பல ஆண்டுகளாக மண்ணில் புதையுண்டிருந்த கப்பலின் பாகம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பாகத்தை அங்கிருந்து அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1917 ஜுலை மாதம் பயன்படுத்தப்பட்டதாக குறித்த நீர்மூழ்கிகப்பலில் எழுதப்பட்டுள்ளது. 1930களில் இதன் பயன்பாட்டை கைவிட்டுள்ள நிலையில் அதனை கடலில் மூழ்கடிக்கும் பணி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கிகப்பலின் மிகப்பெரிய பாகம் தொடர்பில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.