40 சுகதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்றும், நாளையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணியின் ஒத்துழைப்புடன், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வட மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள நிலை குறைவடைந்ததையடுத்து, நீர் நிரம்பிய பகுதிகளில் நுளம்பு பெருகும் அபாயம் ஏற்படுவது பொதுவான விடயமாகும். இதனால் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரிக்கும் அபாயமுள்ள பகுதிகளில் பரிசோதனைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.