இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் ட்ரோலர் படகு கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்கென இந்திய மீனவர்கள் யாழ் உதவி மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.