பிரான்சில் எரிவாயு வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. கடந்த சில வாரங்களாக போராட்டம் தணிந்திருந்த நிலையில், மீண்டும் மஞ்சள்சட்டை அணிந்து அதிகளவானோர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் பதவியிலிருந்து விலகுதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.