யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரியாலை – பூம்புகார் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த நபரை சோதனையிட்டபோதே அவரிடமிருந்து 5 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.