மாலி இராச்சியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 37 பேர் பலியாகியுள்ளனர். மாலியின் மோப்தி பிராந்தியத்திலுள்ள கிராமமொன்றில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கிராமத்தில் வசித்து வந்த பழங்குடியின மக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். ஆயுதமேந்திய வேட்டைக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.