சுற்றுலாப் பயணிகளுக்கு பொருத்தமான சேவையில் ஈடுபடும் கொழும்பு மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. டுக் டுக் என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் ஆரம்பகட்டமாக 270 சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.