சிரியாவிலிருந்து தமது படைகளை மீளப்பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிரியாவிலுள்ள படையினரை மிக வேகமாவும் முழுமையாகவும் அங்கிருந்து மீளப்பெறவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு படைத்தலைமையகம் தெரிவித்துள்ளது. சுமார் 2 ஆயிரம் அமெரிக்க படையினர் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளார்கள். இதன்போது சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் பெரும்பாலனவற்றை மீட்பதற்கு அமெரிக்க படையினர் உதவியளித்ததாக சிரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.