அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறக்கட்டளையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் நிதியை ட்ரம்ப் மற்றும் அவரது புதல்வர்கள் முறைகேடாக பயன்படுத்துவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அறக்கட்டளையின் சொத்துக்கள் தன்னுடைய அலுவலகத்தால் பராமரிக்கப்பட்டு வருவதாக நியுயோர்க் சட்டமா அதிபர் பார்பரா அன்டர்வுட்டினால் தெரிவித்துள்ளார். இதன்போது அறக்கட்டளையின் சொத்துக்கள் தன்னுடைய அலுவலகத்தால் பராமரிக்கப்பட்டுவரும் ஏனைய தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.