பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலையில் மேலதிக நுழைவாயிலொன்று திறக்கப்பட்டுள்ளது. விடுமுறை மற்றும் பண்டிகை காலப்பகுதியில் அதிகளவானோர் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவார்கள் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய மாத்தறை – கொடகம, காலி – பின்னதுவ ஆகிய பரிமாற்று நிலையங்களில் மேலதிக நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. இதற்குரிய ஊழியர்களும் குறித்த நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பரிபாலன முகாமையாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் நேர தாமதமின்றி பயணங்களை மேற்கொள்ளும் வகையிலேயே குறித்த ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்கென நாடுமுழுவதும் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்துகளை கட்டுப்படுத்துவதற்கென மேலதிக பொலிசார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிவில் மற்றும் சீருடைகளுடன் சுமார் 2 ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.