அமெரிக்கா, துருக்கிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் முன்னெடுக்கும் படை நடவடிக்கைகள் தொடர்பிலேயே அமெரிக்காவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. படை நடவடிக்கைகளின்போது அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டுமென அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.