வடகிழக்கு மாகாணங்களில் இராணுவ வசமிருந்த தனியார் காணிகளில் 97 சதீவதமானவை இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி படையணியின் தலையீட்டினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. துரிதமாக சகல காணிகளையும் விடுவிக்கமுடியுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க உரையாற்றுகையில் :
“கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வடகிழக்கு மாகாணங்களில் தாம் எதிர்பாராத வாக்குபலம் எமக்கு கிடைத்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது வைத்திருந்த நம்பிக்கையின் வெளிப்பாடே அதுவாகும். வடகிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி விசேட படையணி உருவாக்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளுக்கு இப்படையணியினால் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மீள்குடியேற்றுவதற்கான பிரதான பிரச்சினையாக காணிகள் விடுவிக்கப்படாமை காணப்பட்டது. உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டுமென்பதை ஜனாதிபதி நன்கு உணர்ந்து வைத்திருந்தார். மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து இராணுவத்திற்கு போதிய விளக்கம் வழங்கப்பட்டத்தையடுத்து இராணுவம் காணிகளை விடுவிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இதுவரை பொதுமக்களின் 97 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.”என தெரிவித்தார்.