பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திகதி நிர்ணயித்தது. தெமடகொட பகுதியில் இளைஞர் ஒருவரை டிப்பெண்டர் வாகனமொன்றில் கடத்திச் சென்றதாக குற்றம் சுமத்தியே ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் 13 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கின் 2 ஆம் சாட்சியாளர்கள் முதல் 7ஆம் சாட்சியாளர்கள் வரையான சாட்சியாளர்களை குறித்த தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அழைப்பாணை பிறப்பிக்குமாறும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.