பாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திடம் இன்று கோரவுள்ளார். சட்டமா அதிபரினூடாக குறித்தகோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண நீதிமன்ற தீர்ப்பு மிக முக்கியமானதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விமல் வீரவங்ச குறித்த கருத்தை முன்வைத்தார்.