ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட பங்காளி கட்சிகளுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நிலை தொடர்பில் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளது.