டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜெக் டோர்சியின் மியன்மார் தொடர்பான டுவிட்டர் பதிவு தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மியன்மார் நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், அந்நாட்டின் உணவு மற்றும் சுற்றுலாத்தளங்கள் மிகவும் அற்புதமானவை எனவும் ஜக் டோர்சி குறிப்பிட்டிருந்தார். எனினும் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள ரொஹின்யா சிறுபான்மை மக்களை ஜெக் டோர்சி புறக்கணித்துவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.