ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான உயர் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்கால தடையுத்தரவு அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
மனு மீதான விசாரணைகள் நேற்றுடன் 4 நாட்கள் நடைபெற்றது. இறுதி விவாதங்களை கேட்ட நீதிபதிகள் விரைவில் தமது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளனர். அதற்கான தினம் குறிக்கப்படாத நிலையில் அதுவரை இடைக்கல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..