அபிவிருத்தி திட்டங்கள் பல இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளன. பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளுக்கான குடியிருப்பு தொகுதி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. கரந்தெனிய மாவட்ட வைத்தியசாலையின் புதிய நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட மேலும் பல திட்டங்கள் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளன. திட்டங்களுக்கென ஆயிரத்து 990 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தென் மாகாண சபை தெரிவித்துள்ளது.