ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு விசேட கூட்டம் இன்று
Related Articles
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. கட்சித்தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரவு 7 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. முக்கிய விடயங்கள் தொடர்பில் விசேடமாக ஆராயப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலை மற்றும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடவுள்ளனர். இதேவேளை பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் ஏற்படக்கூடிய நிலைமைக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பாகவும் விசேடமாக ஆராயப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment