பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீது இன்றும் விசாரணை
Related Articles
பாராளுமன்ற கலைப்பு தொடர்பான ஜனாதிபதியின் வர்த்தமானியை ரத்துசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று 4வது நாளாகவும் இடம்பெற்று வருகின்றன. பிரதம நீதியரசர் நளீன் பெரேரா தலைமையிலான 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை நாளைய தினம் வரை நீடிக்க உச்சநீதிமன்றம் நேற்று தீர்மானித்தது. பாராளுமன்றத்தை கலைப்பதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை மூன்றாவது நாளாக நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையிலேயே தடையுத்தரவை நீடிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான சட்டத்தரணிகளின் வாதம் நேற்று உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இன்றையதினம் பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த மனுதார்கள் சார்பில் நீதிமன்றில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment