ஐபில் கோபுரத்தை நாளைய தினம் மூடுவதற்கு பிரான்ஸ் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். பிரான்ஸில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மோதல்ககள் அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும். எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட வரி மறுசீரமைப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி கடந்த மூன்று வாரகாலமாக பிரான்ஸில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது மோதல்களும் இடம்பெற்றன. இதனையடுத்து பாதுகாப்பு பணிகளில் 89 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதான நகரங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கென இராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பிரதான நகரங்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை மோதல் உருவாக காரணமாக இருந்த வரி மறுசீரமைப்பை எதிர்வரும் நாட்களில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரான்ஸ் பிரதமர் எட்வட் பிலிப் தெரிவித்துள்ளார்.