நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்றைய தினம் நாட்டின் சில மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையின்போது கடும் காற்றும் வீசுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.