யாழ் அச்சுவேலி பகுதியில் வாள்வெட்டுத்தாக்குதலை நடத்திய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அச்சுவெலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகிலுள்ள வீPடொன்றுக்கு வருகைதந்த உறவினர் மீது அயல்வீட்டில் வசித்த நபர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கென யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அச்சுவெலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பகை காரணமாகவே குறித்த வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.