எரிவாயு விலையினை எதிர்வரும் சில தினங்களில் குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியினை கருத்திற்கொண்டு அது தொடர்பில் ஆராய்ந்து எரிவாயுக்கான விலையை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை சிறிய மற்றும் மத்திய தர தொழிற்துறையாளர்களுக்கு எதிர்காலத்தில் மேலும் சில வரி நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு வரி நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.