மட்டக்களப்பு-வவுனதீவு பகுதியில் நேற்று இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ராசநாயகம் சர்வானந்தம் என்ற 48 வயதுடைய கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.நேற்று அதிகாலை இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று காலை முதல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.