சட்ட ரீதியாக ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம், அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு அமைவாகவே தான் பிரதமராக நியமிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சட்ட ரீதியாக ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம், அரசியலமைப்பு ஆகியவறின் பிரகாரமே செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. மக்களின் விரும்பம் இன்றி ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை அபகரிக்க முடியாது என்றும் பிரதமர் கூறினார்.
மக்களுக்கு கூடுதலான நிவாரணங்களை வழங்குவதற்காகவே தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொண்டதாக தெரிவித்த பிரதமர் அதிக சுமையை ஏற்படுத்தி மக்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்குவதற்காக தாம் ஆட்சிக்கு வரவில்லை என்றும் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற் 7000 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கும் நிகழ்விலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயங்களை தெரிவித்தார்.