ஜேர்மன் ச்சான்ஸ்சலர் எஞ்சலா மேர்கல் பயணம் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அயர்லாந்தில் நடைபெறும் பு – 20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜேர்மன் ச்சான்ஸ்சலர் விமானத்தில் பயணித்துள்ளார். பெர்லின் நகரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமானம் நெதர்லாந்து வான் எல்லையில் பறக்கும் போது மின்சார இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தை தொடர்ந்தும் இயக்கமுடியாத சூழலும் உருவானது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.