உக்ரைன் நாட்டு கப்பல்கள் சிறைபிடிப்பு பிரச்சனையை மையப்படுத்தி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உடனான சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டுக்கு அதிக ஆதரவு அளிக்கும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அர்ஜென்டினாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பது உறுதி என ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை அறிவித்திருந்தது. ஆனால், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சினை தீர்ந்த பின்னர் வெகுவிரைவில் அர்த்தமுள்ள சந்திப்பை தான் எதிர்பார்ப்பதாக டிரம்ப் மேலும் கூறியுள்ளார்.