மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்திற் கொண்டு எழுதப்பட்ட பீ புக்ஸ் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி திருமதி சரீனா மொஹிதின் ஹிஸ்புல்லாஹ்வினால் எழுதப்பட்ட பீ புக்ஸ் நூல் கொழும்பு ரமடா ஹோட்டலில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில் தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நூலாசிரியர் சரீனா மொஹிதின் இஸ்புல்லாஹ்விடம் இருந்து நூலின் முதல் பிரதியை தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் பெற்று கொண்டார். ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் இதில் கலந்து கொண்டனர்.