இந்திய பிரதமர் நரேந்திர மோதி சவூதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யுபு – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜன்டீனா சென்றுள்ள இரு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். எரிசக்தி, கலாசாரம் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இருநாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் அரச தலைவர்கள் இருவரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.