காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய சங்கம் புதிய திட்டமொன்றை தயாரித்துள்ளது. 2050ம் ஆண்டு குறித்த இலக்கை பூரணப்படுத்துவதே எதிர்ப்பார்ப்பாகும். பாதகமான வளி, சூழலுடன் இணைவதை தடுப்பதற்கென அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் தேவையென ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தக மற்றும் ஏனைய பொருளாதார செயற்பாடுகளின்போது சூழல் பாதுகாக்கப்படும் வகையில் செயற்படுவதற்கு நடைமுறைப்படுத்தப்படும் யோசனையொன்று சமர்ப்பிக்கப்படுமென ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது.