பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை அமர்வுகள் ஆரம்பமான நிலையில், இன்றைய தினமும் ஆளும் கட்சி பாராளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க இதனை தெரிவித்தார். அதேபோல் இன்றைய தினமும் பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஊடகங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகளை நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடத்திச்செல்ல இணக்கம் காணப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் கலந்துகொள்ளவில்லையென தெரியவருகிறது.
பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது
பாராளுமன்றம் காலை 10.30க்கு கூடவுள்ளது. இதற்கிணைவாக தற்போது பாராளுமன்ற வளாகத்தில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லையென தெரியவருகிறது.