நாட்டிலுள்ள பாடசாலைகளின் வளாகங்களில் 15 வீதமானமை டெங்கு நோய் ஏற்படுவதற்கான ஆபத்துடன் காணப்படுவதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. பாடசாலை விடுமுறை காலம் ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை வளாகம் சுத்திகரிக்கப்படவேண்டும். பாடசாலை வளாகத்தில் டெங்கு நுளம்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இல்லையென உறுதிசெய்வதன் மூலம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களில் மூன்றில் ஒருவர் பாடசாலை மாணவரென தெரியவந்துள்ளது. குறித்த நிலை ஆபத்தானதென சுகாதார மேம்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இதனால் பாடசாலை வளாகத்தை டெங்கு நோய் பரவாத விதத்தில் பேணவேண்டியது கட்டாயமென சுகாதார மேம்பாட்டு பிரிவு வலியுறுத்தியுள்ளது.