மாத்தறை மாணவன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறை பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளால் இன்று காலை சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 24ம் திகதி மாத்தறை எலவில்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 19 வயதான பாடசாலை மாணவரொருவர் கொலை செய்யப்பட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று கைதுசெய்யப்பட்டு, மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நேற்றைய தினம் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.