ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமொன்று நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் இதன்போது பிரதானமாக கலந்துரையாடப்படவுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.