உடவளவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் இரண்டு அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை வான்கதவுகள் திற்கப்பட்டதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. உடவளவ நீர்த்தேக்கத்தின் நீரேந்தும் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழைபெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.