சட்டவிரோத துப்பாக்கிகள் இரண்டுடன் சந்தேக நபர்கள் இருவர் மத்துகம பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி ரவைகள் சிலவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் கலபடயாவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அவர்களை இன்றைய தினம் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.