இந்தியாவின் சென்னை நகரிலிருந்து போதைப்பொருளுடன் இலங்கை வந்த நபரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 36 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி, 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.