கடன் சேவை முறைக்கு களங்கம் ஏற்படுத்தாத வரலாற்றைக் கொண்ட நாடு என்ற இலங்கை. இந்த உயர்வான நிலைப்பாட்டை தொடர்ந்தும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லுமென்று நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் உரிய முறையில் திருப்பிச் செலுத்தப்படவிருக்கின்றன.
இலங்கை குடியரசின் சகல கடன் வழங்குனர்களுக்கும் உரிய தினத்திற்கு முன்னர் கடன்கள் திருப்பிச்செலுத்தப்பட்டுள்ளன.
அடுத்த வருடம் செலுத்த வேண்டியிருக்கும் சர்வதேச இறைமை பிணைமுறிதொடர்பான 1500 மில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த கடனும் திருப்பிச் செலுத்தப்பட இருக்கிறது. இதற்குப் பொறுப்பான நிதி மத்திய வங்கியின் ஒதுக்கத்தில் காணப்படுகிறது. இதற்கென மத்திய வங்கி நெருக்கமான முறையில் செயற்பட்டு வருவதாகவும் நிதி மற்றும் பொருளாதாரஅலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.