பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர் . இதையடுத்து இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் நடைபெற தொடங்கியது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். கடந்த 15ம் திகதி இத்தாலியின் லம்போடியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.